Friday, June 3, 2016

யோகாசன பயிற்சி - பகுதி

            


யோகாசன பயிற்சி - பகுதி 

v

யோகாசனம்

 

  
பதஞ்சலி முனிவரால் இவ்வுலகிற்கு வழங்கப்பட்ட யோகாமதங்களை தாண்டிஅனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய கலையாகும்இது உடலுக்குஆரோக்கியத்தையும்உள்ளத்திற்கு அமைதியையும்மனிதனுக்குஒழுக்கத்தையும் தரும் ஒரூ உன்னத கலையாகும். 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.

யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். "யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்." ஆசனம் என்ற சொல் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும்.

யோகாசனம்= யோகம்+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன. சில யோகாசனங்கள் இரத்த ஒட்டத்தை சீர்படுத்தினாலும் அவை இரத்த ஒட்டத்திற்காக மட்டும் செய்யப்படும் பயிற்சி ஆகாது. இதை போலவே சில யோகாசனங்கள் சுவாசத்தை சீர்ப்படுத்தினாலும், சுவாச சீர்ப்படுத்தலுக்கு என்று சுவாச பந்தனம், பிராணயாமா போன்ற தனிப்பயிற்சிகள் உள்ளன. அதனால் யோகாசனம் என்பது உடற்பயிற்சியும் அவை சார்ந்த நிலைகளும் மட்டுமே.
யோகாசனத்தில் பல வகைகள் உண்டு

No comments:

Post a Comment