Saturday, June 4, 2016

மன அழுத்தத்தை குறைக்கும் தியானம்




தியானம்


மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி, தியானம் மற்றும் சரியான உணவு
 முறையை கடைபிடிப்பதன் மூலம் படிப்பின் மீது கவனத்தைத்
 திருப்பலாம். தேர்வு நேரத்தில் உண்டாகும் உடல் பிரச்னைகளுக்கு உடனடியாக சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

நேரம் கிடைக்கும் போது மனதுக்குப் பிடித்த விளையாட்டுகளில் 
ஈடுபடலாம். தொடர்ந்து பல மணி நேரம் படிப்பதற்கு பதிலாக இடையில் 
ரிலாக்ஸ் செய்யலாம்.

பாதுகாப்பு முறை:
கடினமான பாடங்களை முதலில் படித்தல், மனதில் பதியும்படி குறிப்பெடுத்தல், கேள்விகளை வரைபடம் வரைந்து நினைவில் வைத்துக் கொள்ளுதல் போன்ற யுக்திகள் உதவும். படித்தவற்றை நண்பர்களிடம் சொல்லிப் பார்த்து தவறைத் திருத்தலாம். நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தினால் டென்ஷனை பெரிதளவில் குறைக்க முடியும். முக்கிய கேள்விகளை முதலில் படித்து முடிக்கலாம்.

படம் மற்றும் பாடங்களை கற்பனை மூலம் மனதில் நிறுத்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். படித்த விஷயங்களை குழுவாக விவாதிக்கும் போது அந்த கருத்துகள் மறக்காத வண்ணம் மனதில் பதிந்து விடும். சோர்வை நீக்கி மனதை உற்சாகமாக வைத்திருக்க சிறிய உடற்பயிற்சிகள் செய்யலாம். படிக்க நேரம் ஒதுக்குதல், எளிய யுக்திகள் மூலம் படித்தவற்றை மனதில் வைத்துக் கொள்வது மற்றும் முழுமையாக வெளிப்படுத்துவது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் தேர்வை எந்த பயமும் இன்றி எதிர்கொள்ள முடியும். சத்தான உணவும், தன்னம்பிக்கையும் சாதனைக்கான சாவிகள்  

பல மதங்களிலும், தியானம் ஒரு உடற்பயிற்சி நடை முறையாகப் பல வருடங்களுக்கு முன்பே செயல்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால், இன்று அறிவியல் ரீதியாகத் தியானம் செய்வதின் நன்மை பற்றி ஆய்வுகள் பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளது. தியானம் செய்வதால், நரம்பியல் ரீதியாகப் பல நன்மைகள் உண்டு. இந்த நன்மைகள்,  உடலியல் சார்ந்த செயல்பாடுகளைக் கட்டுப் படுத்தி மேலும் பல நன்மைகளுக்கு வழிவகுக்கின்றது. தியானம் செய்வதால் மன அழுத்தம் குறைகிறதாம். மேலும், பிறர் செய்த தவறை மன்னிக்கும் தன்மையும் வளர்கிறதாம்.
தியானம் மனிதர்களின் மனதில் ஒரு நேர்மறையான அணுகுமுறையை பாதுகாக்க உதவுகிறது. மேலும், அன்றாட நோய்களான இரத்த அழுத்தம், மன அழுத்தம், தலைவலி, மற்றும் பொதுவாக ஏற்படும் உடல் வலி ஆகியவற்றையும் கட்டுப்படுத்தத் தியானம் உதவுகிறது. மேலும், இது ஆஸ்துமா மற்றும் மூட்டுவலி போன்ற நாள்பட்ட நோய்களைத் தீர்ப்பதற்க்கும் உதவியாக அமையும். தியானத்தை வழக்கமாக பயிற்சி செய்பவர்களது அறிவாற்றல், விழிப்புணர்வுத் திறன் மற்றும் கண்காணிப்புத் திறன் ஆகியவை அதிகமாக இருக்கிறதாம். இந்த ஆய்வில் பதிலளித்தவர்கள், தியானம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து, பிறரை தவறாகக் கணிக்கும் மனநிலையும் மாறியிருப்பதாக தெரிவித்தனர்.
இது ஆச்சரியமாக இல்லையா, நண்பர்களே? உங்களில் யார் எல்லாம் தியானம் செய்வீர்கள்? இதைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.

No comments:

Post a Comment